*1 அன்னதானம் செய்தல் – விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.* *2 கோ தானம் செய்தல் – கோலோகத்தில் வாழ்வர்* *3 பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு – கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு* *4 குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்* *5 தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமுக்காளம், பாய், தலையணை – இதில் எதை தானம் செய்தாலும், சந்திர லோகத்து சுகங்களை அனுபவிப்பார்* *6 வஸ்திர தானம் கொடுத்தவர் 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்* *7 இரத்தம், கண், உடல் தானம் கொடுத்தவர் அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்* *8 ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவர் இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்* *9 குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவர் இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்* *10 நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன்வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்* *11 தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவர் மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்* *12 பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை* *13 நற்செயலை விரும்பி செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்* *14 தீர்த்த யாத்திரை புரிகின்றனர். சத்தியலோக வாசம் கிட்டுகிறது* *15 ஒரு கன்னிகையை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவர்கள், 14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்* *16 பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவர், குபேர லோகத்தில் ஒரு மன்வந்தரம் வாழ்வார்* *17 பண உதவி செய்பவர்கள், ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்* *18 நீர் நிலைகளை சீர்திருத்துபவரும், உண்டாக்கு பவரும் , ஜனலோகத்தில் நீண்டகாலம் சுகித்து வாழ்வார்கள்* *19 பயனுள்ள மரங்களை நட்டு பாதுகாப்பவர், தபோ லோகத்தை அடைகிறார்* *20 புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால், 64 ஆண்டுகள் பரமபதத்திலிருப்பான்* *21 தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர், 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.* *22 பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர், இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார். *23 தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவர். நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்* *24 சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவர், ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்* *25 ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும்* *26 அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர், 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்* *27 விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர், 14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்* *28 சுதர்சன ஹோமமும், தன்வந்திரி ஹோமமும் செய்பவர், ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவ ராக, தீர்க்காயுளுடன் வாழ்வர்* *29 ஷோடச மகாலெட்சுமி பூஜையை முறையோடு செய்பவர், குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.* *30 இதைப் படிப்பவரும், கேட்பவரும் புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும், தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார் கள். அவர்களின் பெற்றோரும் பிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.* *எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்க ளோ, அவரவர் அதற்குரிய பொருட்களை, உயரிய ஒழுக்கமுள்ளவர்களுக்குத் தானம் செய்தால் அந்தந்த சுகத்தை அடைவார்கள்* Post navigation கடன் தொல்லை நீங்க பைரவருக்கு இந்த விளக்கு போடுங்க..!